பிருந்தாவனம்

அழகிய கவிப்பூங்கா...





« Home


>



Wednesday, February 16, 2011

முதல்நாள் முதல்நட்பு

ஏதுமறியா பள்ளியின் தொடக்க நாள் 
முதன் முறை தாய்  தந்தையின் 
கரங்களை விட்டு தனியே சென்றநாள்
விழிகளில் கண்ணீருடன் ஒரு வித பயமும் 
தந்தையை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு 
தன்னந்தனியாக நடுக்காட்டில் நடப்பதுபோல் 
வகுப்பறைக்கு மனமின்றி சென்ற தருணம் 
அரவணைப்போடு ஆசிரியர் வகுப்பிற்குள்
அழைத்தாலும் மனம் அதை ஏற்கவில்லை
இருக்கையில்  அவர் அமர்த்தியபோது 
ஓவென்று கதறியழத் துடித்தது மனம் 
சிறைக்குள் அடைபட்டதுபோன்ற உணர்வு
அந்த நொடியில் என் விழிகளில் அவள் முகம் 
அவள் அழகிய சிறு புன்னகையில் 
என் கலக்கம் பறந்தோடியது 
அவளை அருகில் பார்த்தபோதே 
என் தனிமை விலகியது போன்ற 
எண்ணம் என்னுள்
என் கண்ணீரை விலக்கி
பதிலுக்கு புன்னகைத்தேன் 
கண்களால் பேசி முடித்து மழலை 
மொழியில் பேசத்தொடங்கினோம்
அன்றைய பள்ளிப் பொழுது 
கழிந்ததே தெரியவில்லை 
வீட்டிற்கு செல்லும் நேரம் 
அவள் கைகோர்த்து வாசல் வரை 
சென்றேன் இப்போது அவள் கரங்களை
பிரிய மனமில்லை இருப்பினும் 
நாளை மீண்டும் கைகோர்ப்போம்
என்ற எண்ணத்தோடு விடைபெற்றோம் 
மறுநாளின் விடியலை எதிர்நோக்கியவாறு
உற்சாகமாய் வீடு சென்றேன் 
என் நட்பிற்கு தொடக்கப் புள்ளி வைத்த 
இன்பப் பெருமிதத்தில்.....        


                                                   
                                                      

No comments:

Post a Comment